பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். பாலகுமாரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 71.
பாலகுமாரன், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200க்கும் மேற்பட்ட நெடுங்கதைகள் எழுதியுள்ளார். நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment