பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை இராஜினாமாச் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதனை ஏற்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு, சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்தார்.
ஆனாலும், அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாமென ரணில் விக்ரமசிங்கவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றுமொரு சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tuesday, April 3, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment