'நாச்சியார்' படத்திற்கு பிறகு தற்போது 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜோதிகா அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் துமாரி 'சுலு ஹிந்தி' பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார். நடிகர் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கின்ற நிலையில் படக்குழு இப்படத்தின் தலைப்பை கண்டுபிடிக்கும் புதிர் போட்டியை அறிவித்துள்ளனர். அதன்படி படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச்சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என்று அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் பங்கு பெற பின் வரும் க்ளூவிற்கு தகுந்தாற்போல் பதிலை கண்டுபிடித்து கீழ் வரும் லிங்கில் பதிவு செய்ய வேண்டும்.
1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.
2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.
3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment