மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியதில் இருந்து தீவிர அரசியல் பயணத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் நேற்று மாலை திடீரென்று சந்தித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. கமல்ஹாசன்-விஷால் தவிர வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்துக்கு பிறகு, நடிகர் விஷால் முதல் முறையாக அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பா? அல்லது சினிமாத்துறை சம்பந்தமான சந்திப்பா? என்று பல கேள்விகள் எழுந்தன.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஷால் வட்டாரத்தில் கேட்டபோது, டிஜிட்டல் சேவை கட்டணம் தொடர்பாக பட அதிபர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக நடிகர் விஷால், கமல்ஹாசனிடம் எடுத்து கூறியதாகவும், வேலைநிறுத்தத்துக்கு தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்றும் விஷால் தெரிவித்ததாகவும், மேலும் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
Monday, March 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment