எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தற்போது வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ளன. இதன்போது, இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். வடக்கு- கிழக்கில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். எமது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.” என்றுள்ளார்.
Thursday, December 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment