யாழ். வலிகாமம் வடக்கு வயாவிளான் கிராமத்தின் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் இன்று வியாழக்கிழமை விடுவித்துள்ளது. வயாவிளான் உத்தரமாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் J/245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காணிகள் சிலவுமே இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆஜர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகக் கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் குறித்த பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கியது. எனினும், வயாவிளானின் எஞ்சிய பகுதி விடுவிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இக்காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி, யாழ். அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், வலி வடக்கு பிரதேச செயலர் உள்ளிட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Thursday, November 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment