புதிய அரசியலமைப்பின் மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்படும், பொது வாக்கெடுப்பின்றி புதிய அரசியலமைப்பு இறுதி செய்யப்படாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு நாட்டை துண்டாடும் முயற்சி என்று சில தரப்பினர் பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான அஜித் பி. பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியும், மஹிந்த அணியும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன. அந்தக் கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியே முடிவெடுக்கப்படும். அதன்பின்னரே, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அது, மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும். அதில் வெற்றி பெற்றாலே, நடைமுறைக்கு வரும்.” என்றுள்ளார்.
Monday, October 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment