மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று திங்கட்கிழமை அ.தி.மு.க.வின் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவரது நடவடிக்கைக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ப.சிதரம்பரம், ‛‛பெரும்பான்மை இல்லாத அரசை காப்பாற்றுவதற்காக சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்துள்ளார். மூழ்கி கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது. '' என பதிவிட்டுள்ளார்.
Tuesday, September 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment