தற்போதையை கூட்டு அரசாங்கத்தை தோற்கடிக்கும் பலமான மாற்று அணியொன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்றுக் கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டைத் தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான அணி ஒன்று உருவாவதைத் தடுக்க முடியாது.” என்றுள்ளார்.
0 comments :
Post a Comment