“நான் மதுபோதையில் நல்லூர் கோயில் வீதியில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது.” என்று நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரான செல்வராசா ஜயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதன்போதே, குறித்த நபர் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்டார், நான் சுட்டேன்’; நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்!
Tuesday, July 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment