இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தேவையிருக்கின்றது. அதனை, இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவர நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கயைில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள கனேடிய பிரதமர், எனினும், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலின் ஊடாகவே நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் அரச படையின் ஒத்துழைப்போடு 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டடார்கள்.
Home
»
Sri Lanka
»
குற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்: ‘கறுப்பு ஜூலை’ நினைவு தின அறிக்கையில் கனேடிய பிரதமர் வலியுறுத்தல்!
Monday, July 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment