இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலமான மீன்பிடித்தலை தடை செய்யும் இலங்கையின் புதிய சட்டம், இலட்சக் கணக்கான இந்திய (தமிழக) மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதமொன்றையும் அவர் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எல்லை தாண்டி மீன் பிடித்தால் 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.20 கோடி அபராதமும் விதிக்கப்படும் என இலங்கை அரசு புதிய சட்ட திருத்தம் செய்துள்ளது. அது பாக்ஜலசந்தி (பாக்கு நீரிணை) கடல் பகுதியில் பல நூற்றாண்டுகளாக மீன் பிடித்து வரும் இந்திய (தமிழக) மீனவர்களின் உரிமையை குறி வைத்து இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாக்ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருவது தாங்கள் அறிந்ததே. தற்போது இலங்கை அரசு கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள இந்த சட்ட திருத்தம் இலட்சக்கணக்கான நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.
இலங்கை அரசின் சட்ட ரீதியிலான இந்த நடவடிக்கை தூதரக ரீதியில் நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நினைக்கும் முயற்சிக்கு மிகவும் பின்னடைவாக அமையும்.
இலங்கை அரசு மனிதாபிமானமற்ற முறையில் நமது மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதன் மூலம் நமது மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 50 தமிழக மீனவர்களும், 143 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசின் இந்த புதிய சட்ட திருத்தம் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக மீன் பிடிக்க நமது மீனவர்களுக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கிய உரிமையை தடுக்கும் நோக்கமாகும்.
எனவே வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதுக்குழுவினர் நமது கடுமையான எதிர்ப்பை உடனடியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாக்ஜலசந்தி பகுதியில் நமது உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளது.
இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) முறையிலான மீன்பிடி முறை தடை செய்யப்படுவதால், அதனை மீறி செயற்படுவர்களுக்கு ஆகக் குறைந்தது 50,000 ரூபாய் தண்டப்பணம் அறவிப்படும் அல்லது இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று இலங்கையின் புதிய சட்டம் கூறுகின்றது.
Home
»
India
»
இலங்கையின் புதிய சட்டம் இந்திய மீனவர்களைப் பாதிக்கும்; தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம்!
Saturday, July 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment