யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் குறித்த நபரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் முற்படுத்திய போதே அவரை 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவர் கொல்லப்பட்டார்.
Home
»
Sri Lanka
»
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்!
Wednesday, July 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment