வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கையில், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் குற்றமிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அவர்களை பதவி நீக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது குற்றமிழைத்தவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் இயல்பாகவே எழுந்துள்ளது. எனினும், குறித்த இரு அமைச்சர்களை மாத்திரம் அவருக்கு பதவி நீக்குவதில் அவ்வளவு உடன்பாடில்லை என்றும், அதனால், நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் அவர் மாகாண சபை உறுப்பினர்களோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வழி உரையாடல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில் வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் கைச்சாத்திட்ட கோரிக்கைக் கடிதமொன்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்தே, அமைச்சர்களை பதவி நீக்க முதலமைச்சர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அப்படியாயின், விசாரணை அறிக்கை என்னவாகும், அதில், குற்றம் நீருபிக்கப்படாத அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோரின் பதவி நீக்கத்தினை அந்தக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.
Home
»
Sri Lanka
»
வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முடிவு?
Monday, June 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment