“என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டும். எனது அமைச்சின் கீழான நடவடிக்கைகள் அனைத்தும், அமைச்சரவையின் முடிவுகளுக்கு இணங்கவே முன்னெடுக்கப்பட்டன.” என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை மீது மாகாண சபையில் இன்று புதன்கிழமை விசேட விவாதம் இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இதனிடையே, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை நாளை வியாழக்கிழமை மதியத்துக்குள் பதவி விலகுமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
‘என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டும்’: த.குருகுலராஜா
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment