எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தத் தேர்தலிலும் தனக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தங்களது இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமற் செய்து கொள்வீர்களா? என்கிற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த கோத்தபாய ராஜபக்ஷ, “தேர்தலில் போட்டியிடும் எண்ணம் என்னிடம் இல்லை என்பதனால், இரட்டை பிரஜாவுரிமை, எனக்குப் பிரச்சினை இல்லை.” என்றுள்ளார்.
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment