வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகிய இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
அத்தோடு, குற்றங்கள் நிரூபிக்கப்படாத சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் மீது மீள்விசாரணை நடத்தப்படும் என்றும் அந்தக் காலப்பகுதியில், குறித்த அமைச்சுக்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை மீது மாகாண சபையில் தற்போது (இன்று புதன்கிழமை) விசேட விவாதம் இடம்பெற்று வருகின்றது. அங்கு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Sri Lanka
»
பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோர் இருவரையும் பதவி விலகக் கோருகிறேன்: சி.வி.விக்னேஸ்வரன்
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment