வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக புதிய விசாரணைக்குழுவொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இன்றைய (வியாழக்கிழமை) அமர்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளில் குற்றவாளிகளாக காணப்பட்டு பதவி விலகிச் சென்ற இரு அமைச்சர்களின் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் தகைமை, பிரதேசம் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து உரியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் விவசாய அமைச்சராக செயற்பட்ட பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சராக செயற்பட்ட த.குருகுலராசா ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனையடுத்து அவர்கள் பதவி விலகியிருந்தனர்.
Home
»
Sri Lanka
»
அமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக்குழு; சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு!
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment