குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க முன்மொழிந்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ராம்நாத் கோவிந்தை அ.தி.மு.க முழுமனதாக ஆதரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதை அடுத்து, நடத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment