கோவில்பட்டி, தூத்துக்குடி, அருப்புகோட்டை, போன்ற நகரங்களில் பெரும்பாலான
அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள்
மட்டுமே இயக்கப்படுகின்றன.
தனியார் பேருந்துகளை பொருத்தமட்டில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட
அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அதாவது எந்த ஊருக்கு கூட்டம் அதிகமாக
இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது
குறிப்பிட்ட கிராமங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்த மினி
பேருந்துகளும் நீண்ட தூர பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால்
அவர்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
இதே போன்று சுற்றுலா பெர்மிட் மட்டும் வைத்துள்ள தனியார் பேருந்துகளும்
எந்த நகரங்களுக்கும் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கபடுகிறது. இதனால் எந்த
ஊருக்கு எவ்வளவு கட்டணம் என தெரியாமல் அவர்களாகவே கட்டணத்தை நிர்ணயித்து
பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
இயக்கப்படும் ஒரு சில அரசு பேருந்துகளும், நகர பகுதிகளுக்கு மட்டுமே
இயக்கப்படுவதால் கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல்
பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment