கேரள மாநிலம் அருவிக்காரா தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சபரிநாதன்.
இவர் திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக பணியாற்றும் திவ்யா எஸ். ஐயர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். காதல் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இவர்களை பற்றிதான் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சபரிநாதன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எனது திருமணம் பற்றி பலர் கேட்டு வருகின்றனர். தற்போது இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கின்றேன். திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக இருக்கும் டாக்டர் திவ்யா எஸ்.ஐயர் என்பவரை திருமணம் செய்ய உள்ளேன்.
நாங்கள் பழகிய போது, எங்களது கொள்கை, எண்ணம் ஆகியவை ஒத்து போனதை அறிந்தோம். இரு குடும்ப ஆசியுடன், திவ்யா எனது மனைவியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment