ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த காரணத்தினால் கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியில்லை என, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 03ஆம் திகதி உத்தரவிட்டது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையிலேயே, பாராளுமன்ற செயலாளர் நாயகமும் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து; தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு!
Tuesday, May 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment