வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர், வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்துள்ள போராட்டத்தினால், சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திரும்பிச் சென்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து, முதலமைச்சரை வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்தே, அவர் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது திரும்பிச் சென்றார்.
Home
»
Sri Lanka
»
பட்டதாரிகளுடனான பேச்சு தோல்வி; சி.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது திரும்பிச் சென்றார்!
Tuesday, May 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment