இராணுவம் பெற்ற போர் வெற்றியை கொண்டாடும் தினத்தினை இலங்கையின் சுதந்திர தினத்தோடு இணைப்பது சிறப்பானது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“தெற்கில் போர் வெற்றி கொண்டாடப்படும் போது வடக்கில் போரினால் உயிரிழந்த பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெறுகின்றது. இது இலங்கையின் சாபமாகும். ஆகவே, போர் வெற்றி தினத்தை சுதந்திர தினத்தோடு இணைக்கலாம். அது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுத்தால் சிறந்தது. அதுபோல, போரில் பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களை நினைவு கூருவதற்கு எந்தத் தடையும் இல்லை.” என்றுள்ளார்.
Tuesday, May 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment