நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால், நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் ஏதும் தன்னிடம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்தப்படுவதனையே எதிர்ப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
நல்லாட்சி மீதான அதிருப்தி அதிகரிப்பு; நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்கிறது: மஹிந்த
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment