இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவதைத் தடுக்கும் நோக்கில் நடுக்கடலில் இலங்கையின் எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் பெயர்ப் பலகையொன்றை இலங்கை நிறுவியுள்ளது.
இரு நாடுகளினதும் மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதற்காக, இலங்கையிலிருந்து 5வது மணல் திட்டில் இலங்கைக் கொடியுடன் இலங்கையின் எல்லைப் பலகையும் தனுஷ்கோடியிலிருந்து 5வது மணல் திட்டில் இந்தியாவின் எல்லைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே பாரிய பிரச்சினைகள் நீடித்து வருவதோடு, பரஸ்பர கைது நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை- இந்திய அரசுகளுக்கு இடையில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படாத நிலையில் இவ் எல்லைப்பலகை நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment