புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையில் நேற்று புதன்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு சீர்திருத்தம் அன்றி, புதிய அரசியலமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இரு கட்சிகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, தொடர்ந்தும் புதிய அரசியலமைப்பு பற்றி உரையாடல்களை நடத்துவதற்கும் இரு கட்சிகளும் இணங்கியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோரும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் விஜித ஹேரத், ரில்வின் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Thursday, April 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment