வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜக்கிய நாடுகள் கால அவகாசம் வழங்கும் விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கிப் போக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனவே, இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களின் உணர்வுகளுக்கு புறம்பாக செயற்படக் கூடாது என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணால் ஆக்கப்பட்டவர்கள், காணி, அரசியல் கைதிகள் விடயங்களை முதன்மை படுத்தி தங்களின் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கோரியிருந்தனர். மக்களும் அதற்கான ஆணையை வழங்கியிருந்தார்கள். ஆனால், தற்போது எங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் அதற்கு மாறாக செயற்படுகின்றனர் என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!
Tuesday, February 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment